Friday, November 18, 2011

விஜயை பாதித்த 'சுறா' வின் கதை என்ன ஆச்சு பாத்தீங்களா?

வீட்டில், ஊரில் விசேஷம் என்றால் விலங்கை/பறவையை  கொன்று விருந்து படைப்பது நம்ம தொன்று தொட்ட கலாச்சாரம்.

"வராதவங்க வந்த்ருகீங்க , இருந்து விருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்று அவ்வளவு நாள் ஆசையாக வளர்த்த கோழியை உரித்து குழம்பு வைப்பது.

'மகள் / மகனுக்கு   காது குத்து,மறக்காம வந்த்ருங்க' என்று சொந்தங்களை எல்லாம் அழைத்து, கடா வெட்டி விருந்து வைப்பது.

'இன்னைக்கு ராவுத்தர் வீட்டுல கல்யாணம், மட்டன் பிரியாணி சூப்பர் ஆகா இருக்கும், வாங்கடா போகலாம்' என்று ரவுண்டு கட்டுவது.

விலங்கு/பறவைங்க விருந்துக்கு மட்டுமா, 'நாங்க மருந்துக்கும் பயன் படுதுவோம்ல' என்று அந்த விலங்க சாப்பிட்ட அந்த நோய்க்கு நல்லது, சிட்டுக்குருவிய லேகியம் செஞ்சு சாப்பிட்டா 'அந்த' விசயத்துக்கு நல்லதுன்னு அதையும் விடுராதா இல்ல.

இதே மாதிரி தான் சீனர்களும்.  அவங்க சூரியனுக்கு கிழே எந்த ஒரு ஜந்து நகர்ந்தாலும் அத சாப்பிட்டு பாத்துடுவாங்க. 
அந்த மாதிரி அவங்களுக்கு விலங்குகள் மேல ஒரு ஸ்பெஷல் பாசம்.


அதுலயும்  ஒரு குறிப்பிட்ட விலங்க சூப் செய்து சாப்பிடுறது அவங்களுக்கு அலாதி பிரியம். அவங்களோட வீட்டு  திருமணத்தில கட்டாயம் இந்த சூப் ஐட்டம் இருந்தாதான், அந்த விருந்தே 'தட புடலா' இருந்ததா அவங்க உறவுக்காரவுங்க மெச்சுவாங்கலாம். அதுவுமில்லாம, அந்த சூப்ப சாப்பிட்டா,
ஆண்மை வளரும், முகம் பள பளன்னு ஜொலிக்கும், ஹார்ட் அட்டாக் வர்றத தடுக்கும், கொலச்ட்டுரால் குறைக்கும், அவ்வளவு ஏன், கேன்சரக் கூட குணபடுதும்மின்னு, எந்த டுபாகுரோ , அள்ளிவிட, கேட்கணுமா, அந்த விலங்கு சூப் ஒரு காஸ்ட்லியான ஆனா தவிர்க்க முடியாத மோகமா மாறிப் போச்சு அவங்க கலாச்சாரத்துல.

நாம என்ன தான் விருந்துல  ஆடு,மாடு , கோழிய , போட்டி போட்டு கொன்னு சாப்பிட்டாலும், இன்னொரு சைடுல, அதுகள வளத்து , அதோட இனம் அழியாமா பாத்துகிடுறோம்.   ஆனால் , பாவம் , அந்த விலங்க அப்படில்லாம் தீனி போட்டு வீட்ல வளக்க முடியாது.  ஏற்கனவே, சீனவுங்க , ஜனத் தொகையில நம்மளுக்கு சரிக்கு சரியா மல்லுக்கட்டி நிக்குறாங்க. அதுல பெரும்பாலோர் , இப்படி ஒரு விலங்க 'கட்டம்' கட்டி, விடாம சூப்பு வச்சு குடிச்சா என்ன ஆகும்? அந்த இனமே அழியாதா.

அப்படிதான் ஆகிப் போச்சு இப்ப. அதுனால எல்லாரும் இப்ப கொஞ்சம் முழிசிகிட்டு , இப்படியே விட்டா, ஈக்கோ சிஸ்டத்தையே பாதிக்கும்ன்னு சொல்லி , ஒரு விழிப்புணர்வு உருவாக்கி அத தடுக்க ஆரம்பிச்சுருக்காங்க.

அந்த சூப் பேரு ,  Shark Fin சூப் .  இதுல கொடுமை என்னன்னா,  ஷார்க் மீன அவங்க கொல்ற விதம். அந்த மீனோட , Fin என்று சொல்லப் படுகிற அந்த 'இறக்கை' பார்ட்ட மட்டும் அறுத்து எடுத்திகிட்டு,அத அப்பிடியே கடல்ல போட்டுருவாங்க. அந்த மீன் பாவம் அந்த
Fin வச்சு தான் அதுனால அங்க இங்க போகமுடியும், அத கட் பண்றதால ,அதுனால சரியா நீந்த முடியாம , அப்படியே தண்ணிக்குள்ள மூழ்கி, மித்த மீன்கள் அத உயிரோட கடிச்சி சாப்பிட்டுடும்.

இந்த 'இறக்கை' விலை, ஒரு பவுண்டுக்கு முன்னூறு டாலர் ஆமாம்.
விடுவாங்களா வியாபாரிக, போட்டி போட்டு விக்கிரானுங்க.









நம்மாளுங்க சுறாவ, புட்டு போட்டு சாப்பிடுறாங்க, ஆனா சைனீசுக்கு சுறா கறி மேல அவளவா இண்டரெஸ்ட் இல்ல ,அதனால அந்த கறிக்கு அவ்வளவு மவுசு இல்லையாமாம்.

எனக்கு தெரிஞ்ச சைனீசுகிட்ட கேட்டேன்,
"சூப் எப்படி இருக்குமின்னு"
" சூப் நல்லா தான் இருக்கும் , அந்த Fin டேஸ்ட் ஓகே தான், பெருசா விசேசம் இல்ல"
"அப்புறம் ஏன் இத விழுந்தடிச்சு ரொம்ப காசு போட்டு வாங்கி குடிக்கிறீங்க?"
"எல்லாம் ஒரு கெத்துக்கு தான்".


2 comments:

  1. ///அவங்க சூரியனுக்கு கிழே எந்த ஒரு ஜந்து நகர்ந்தாலும் அத சாப்பிட்டு பாத்துடுவாங்க. ///

    ஹி..ஹி.. சூப்பர் மேட்டர்...

    ReplyDelete
  2. அட என்ன ஜென்மமோ...
    கெத்துக்காக இவ்வளவு அநியாயமா???

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)